Ads

10 நாட்களுக்குள் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மதிப்பெண் முறையை இறுதி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களும் 10 நாட்களுக்குள் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மதிப்பெண் முறையை இறுதி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு.


இந்தியாவில் கொரோனோ சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கான மதிப்பெண்களை கணக்கீடு செய்வதற்கான குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது எப்படி என்பது போன்ற வழிமுறைகளை வகுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த வாரம் 17-ஆம் தேதி டெல்லி உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ சார்பாக மாணவர்களுக்கான பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து விளக்கம் அளித்தது.

அதன்படி மாணவர்கள் 11ம் வகுப்பில் பெற்ற சராசரி மதிப்பெண்ணை கொண்டு 30% வெயிட்டேஜ் முறையில் மார்க் அளிக்கப்படும். பன்னிரண்டாம் வகுப்பில் மாணவர்கள் எழுதிய தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டு 40% வெயிட்டேஜ் மார்க் கொண்டு வழங்கப்படும். மேலும் எழுத்துத் தேர்வு மதிப்பீட்டில் மாணவர்கள் குறைந்தபட்சம் 32 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என்று அறிவித்துள்ளது. பள்ளிகளின் கடந்தகால செயல்பாடுகளையும் கருத்தில் கொண்டு மாணவர்களின் மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்படும். மேலும் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு அடிப்படையில் 30 % மதிப்பெண்கள் வழங்கலாம் என உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மதிப்பெண் முறைக்கு நேற்று உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது.

இன்று 12ஆம் வகுப்புக்கான மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்களுக்கான மதிப்பீடு முறையை 10 நாட்களுக்குள் அனைத்து மாநிலங்களும் இறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் இறுதி செய்த மதிப்பெண்களை ஜூலை 31-ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை அந்தந்த மாநில அரசாங்கம் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers