Ads

மத்திய அரசு அறிவுறுத்தினால் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தயார் - கல்வி அமைச்சர் திரு அன்பில்

தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.



அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த பேட்டியில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர், ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு குறித்து முதலமைச்சர் எடுக்கும் முடிவுகளின்படி தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க தயாராகவுள்ளது. உலக சுகாதார மையம், மத்திய அரசு அறிவுறுத்தினால் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தயாராக உள்ளோம்.

தமிழகத்தில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் குறித்து மாவட்டம் வாரியாக கணக்கெடுப்பு நடத்தி வருகிறோம். அதன் அறிக்கை கிடைத்ததும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Featured Post

11ம் வகுப்பு - வணிகவியல்  அரசு பொதுத்தேர்வு   முக்கிய வினா - விடைகள்  2024

Categories

மொத்தப் பக்கக்காட்சிகள்

Followers